Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

Mahendran
புதன், 4 ஜூன் 2025 (17:57 IST)
சிவகாசியில் அமைந்துள்ள பாரம்பரியமான விஸ்வநாதர் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. கடந்த பத்து நாட்களாக, விசுவநாதர் மற்றும் விசாலாட்சி அம்மன் பக்தர்களை கவரும் பல்வேறு வாகனங்களில்  ரிஷபம், குதிரை, காமதேனு உள்ளிட்டவையில் ரத வீதிகளில் எழுந்தருளி திருவிழாவை மகிழ்ச்சியுடன் நடத்தினர்.
 
இன்று காலை, விழாவின் முக்கிய நிகழ்வாகிய திருத்தேரோட்டம் துவங்கப்பட்டது. தேர் நகரும் போதே, அறநிலையத்துறை கோவில் தேரை வடக்கு ரத வீதியில் நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஆனால், பொதுமக்கள் மற்றும் கோவில் மண்டகப்படிதாரர்கள், தேரை கோவில் முன்பே நிறுத்தப்பட வேண்டும் என்ற வலியுறுத்தலுடன், காவல்துறை மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
இதனால், தேர் இடைநிலையாக கிழக்கு ரத வீதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தையால் சமாதானம் ஏற்பட்டது. அதிகாரிகள் தற்காலிகமாக கோவில் முன்பே தேரை நிறுத்த ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, மக்கள் அமைதியாக பின்வாங்கினர்.
 
இந்த நிகழ்வுக்காக 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments