Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய நோயாளிகளை விட அதிகமான டிஸ்சார்ஜ் எண்ணிக்கை –குறைகிறதா கொரோனா பாதிப்பு?

Webdunia
புதன், 8 ஜூலை 2020 (08:24 IST)
தமிழகத்தில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களை விட டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே சென்றது. இதுவரை இல்லாத அளவுக்கு உச்சமாக 4000க்கும் மேற்பட்ட பாதிப்புகள் தினசரிக் கண்டறியப்பட்டன. இந்நிலையில் கடந்த இரு நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் குறைய ஆரம்பித்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 4000க்கும் குறைவாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் மற்றொரு ஆறுதல் செய்தியாக நேற்று சிகிச்சையில் குணமாகி வீட்டுக்கு அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,545 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் முதல் முதலாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அட்மிஷன் நோயாளிகளை விட அதிகமாகியுள்ளது ஆறுதலை அளித்தூள்ளது. இதுவரை தமிழகத்தில் 71,116 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

அதே போல ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஸ்வின் வீடு இருக்கும் சாலைக்கு அவரது பெயர்: சென்னை மாநகராட்சி முடிவு..!

அக்பர், சிவாஜியால் கூட தமிழ்நாட்டை வெல்ல முடியவில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு

டாஸ்மாக் ஊழலில் முதல்வர் ஸ்டாலினுக்கு பங்கு இருக்கிறதா? எலான் மஸ்கின் Grok சொன்ன பதில்..!

தினமும் ஷூட்டிங் நடத்தும் ஸ்டாலின்.. கருப்புக்கொடி போராட்டம் அறிவித்த அண்ணாமலை!

7 மாவட்டங்களில் இன்று, 10 மாவட்டங்களில் நாளை! - குளிர்விக்க வரும் மழை!

அடுத்த கட்டுரையில்
Show comments