வேந்தர் மூவிஸ் மதன் மாயமானதை அடுத்து மாய மதன், மோசடி மதன் என்று மக்களிடம் பெயர் பெற்று வருகிறார்.
வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மதன், பல நபர்களிடம் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கு கல்லூரிகளில் சீட்டு வாங்கி தருவதாக கூறி லட்சக் கணக்கில் பணம் மோடி செய்துவிட்டு காசியில் சென்று சமாதி ஆக போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமானார்.
மாயமான மதனை கண்டுபிடிக்க முதலில் அவரது முதல் மனைவி காவல் ஆணையரிடம் மனு கொடுத்தார். அவரைத்தொடர்ந்து மதனின் 2வது மனைவி மற்றும் தாயார் தங்கம் ஆகியோரும் மனு கொடுத்தனர். மேலும் மதனின் தாயார் தன் மகனை கண்டுப்பிடித்து தரக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் காவல் துறையினர் தனிப்படை அமைத்து மதனை தேடி வருகின்றனர். விமான நிலையத்தில் இருந்த அவரது காருக்கு காவல்துறையினர் பூட்டுப் போட்டனர்.
இதையடுத்து திருநெல்வேலி தொகுதியில் ஒருமுறை தேர்தலில் போட்டியிட்டதால் அங்கு மறைந்திருக்கலாம் என்று திருநெல்வேலி மாவட்டத்திலும் காவல் துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.