Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவை கொன்ற கொலைகார குடும்பம்: தினகரனை வறுத்தெடுத்த இயக்குநர்!

ஜெயலலிதாவை கொன்ற கொலைகார குடும்பம்: தினகரனை வறுத்தெடுத்த இயக்குநர்!

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2017 (16:26 IST)
ஆர்கே நகர் தொகுதியில் ஓபிஎஸ் அணி சார்பாக போட்டியிடும் மதுசூதனனை ஆதரித்து பிரபல இயக்குநரும், நடிகருமான ஆர்.சுந்தர்ராஜன் பிரச்சாரம் செய்தார். அவர் சசிகலா குடும்பத்தை கொலைகார குடும்பம் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.


 
 
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் சசிகலா அணியை சேர்ந்த தினகரனுக்கும், ஓபிஎஸ் அணியை சேர்ந்த மதுசூதனனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு அணியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் மதுசூதனனை ஆதரித்து இயக்குநர் சுந்தர்ராஜன் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார். அப்போது பேசிய அவர், கொலைகார குடும்பம் என தெரிந்துதான் தைரியமாக எதிர்த்து நிற்கிறோம் என்றார். ஆர்.கே.நகர் தொகுதியில் அந்த குடும்பத்தை சேர்ந்த யாராவது வந்தால் மக்கள் அவர்களை உள்ளே நுழைய விடமாட்டார்கள்.
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கொன்ற குடும்பம் சசிகலா குடும்பம். அந்த கொலைகார குடும்பத்தை சேர்ந்த தினகரனை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். மேலும் எம்ஜிஆர் போன்று மக்கள் மனதில் நின்ற உங்கள் வீட்டு பிள்ளை மதுசூதனனுக்கு வாக்களிக்க வேண்டும் என சுந்தர்ராஜன் பிரச்சாரம் செய்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது.. மனிதகுலத்திற்கு தான் தோல்வி : நேபாளம்

அடுத்த கட்டுரையில்
Show comments