Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரம்பலூர் அருகே கிடைத்த பழங்கால முட்டைகள்; டைனோசர் முட்டைகளா?

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (09:59 IST)
பெரம்பலூரில் குளத்தை தூர்வாரியபோது கிடைத்த படிமங்கள் டைனோசர் முட்டையாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அருகே குன்னம் பெரிய ஏரியில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது பல்வேறு புதைபடிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் முட்டை போன்ற பெரிய படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக பூமியில் வாழ்ந்த டைனோசர்களின் முட்டைகளாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து புதைப்படிமங்களை ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஏரியில் கிடைத்த புதைபடிமங்களை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

சென்னையில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்: வானிலை ஆய்வு மையம்..!

சொந்த வீடு, பான் அட்டை, ஆதார் அட்டை.. 30 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்த வங்கதேச தம்பதி கைது

அடுத்த கட்டுரையில்
Show comments