Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரம்பலூர் அருகே கிடைத்த பழங்கால முட்டைகள்; டைனோசர் முட்டைகளா?

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (09:59 IST)
பெரம்பலூரில் குளத்தை தூர்வாரியபோது கிடைத்த படிமங்கள் டைனோசர் முட்டையாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் அருகே குன்னம் பெரிய ஏரியில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது பல்வேறு புதைபடிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் முட்டை போன்ற பெரிய படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக பூமியில் வாழ்ந்த டைனோசர்களின் முட்டைகளாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து புதைப்படிமங்களை ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஏரியில் கிடைத்த புதைபடிமங்களை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் உல்லாச குளியல் ஆடும் சிறுவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments