பாரின் மாட்டுப்பாலை குடித்துதான் பெண்கள் பேரல் போல ஆகிவிட்டார்கள் – திமுக பேச்சாளர் லியோனி பேச்சால் சர்ச்சை!

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (08:26 IST)
தொண்டாமுத்தூரில் வேட்பாளர் கார்த்திகேய சேனாபதியை ஆதரித்து திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் லியோனி பேசினார்.

திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர்களில் ஒருவரான திண்டுக்கல் லியோனி இப்போது தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக உள்ளார், கோவையில் முகாமிட்டுள்ள அவர் தொண்டாமுத்தூர் வேட்பாளர் கார்த்திகேய சேனாபதிக்காக வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர் ‘ நாட்டு மாடுகளைக் காப்பாற்ற பாடுபடுபவர் கார்த்திகேய சேனாபதி. மாடுகளில் பல வகை உண்டு. பாரின் மாடு எல்லாம் மெஷின் வைத்துதான் பால் கறப்பார்கள். அந்த மாடு எல்லாம் ஒரு மணிநேரத்துக்கு 40 லிட்டர் பால் கறக்கும். அதைக் குடித்துவிட்டுதான் நம் பெண்கள் பலூன் மாதிரி ஆகிவிட்டார்கள். அப்போதெல்லாம் நம் பெண்களின் இடுப்பு 8 போல இருக்கும். குழந்தைகளை தூக்கிவைத்தால் அப்படியே உட்கார்ந்துகொள்ளும். ஆனால் இன்று இடுப்பு பெறுத்து பேரல் போல ஆகிவிட்டார்கள்’ என்று பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ இணையத்தில் பரவி அவருக்குக் கண்டனங்கள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments