Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவை சந்திக்க எம்எல்ஏவாக செல்லும் தினகரன்!

Webdunia
புதன், 27 டிசம்பர் 2017 (17:09 IST)
ஆர்கே இடைத்தேர்தலில் அபார வெற்றி பெற்ற டிடிவி தினகரன் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
ஆர்கே நகர் தேர்தலில் வெற்றி பெற்றதின் மூலம் எம்எல்ஏவாக உள்ள டிடிவி தினகரன் தேர்தல் வெற்றிக்கு பின்னர் சசிகலாவை சந்திக்க செல்லவில்லை. காரணம் சசிகலாவை தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறை தான் சந்திக்க சிறைத்துறை அனுமதிக்கிறது.
 
இதனையடுத்து தினகரன் வரும் 29-ஆம் தேதி பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது தினகரன் சட்டசபையில் எப்படி செயலாற்ற வேண்டும், எடப்பாடி, ஓபிஎஸ் அணியினரை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என ஆலோசனை நடத்தலாம்.
 
வரும் 29-ஆம் தேதி தினகரன் எம்எல்ஏவாக பதவியேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெங்களூர் சிறை தரப்பு சிறப்பு அனுமதி அளித்தலாம் இன்றே தினகரன் சசிகலாவை சந்திக்கலாம் எனவும், ஆனால் இதுவரை அப்படி அனுமதி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments