Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறைக்கு செல்ல இருக்கும் தினகரன்: தமிழிசையை தொடர்ந்து ஆரூடம் சொல்லும் எச்.ராஜா!

சிறைக்கு செல்ல இருக்கும் தினகரன்: தமிழிசையை தொடர்ந்து ஆரூடம் சொல்லும் எச்.ராஜா!

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (15:02 IST)
தமிழக பாஜக தலைவர் தமிழிசை அரசியல் நிலவரம் குறித்து ஏதாவது கருத்து கூறினால் அது அப்படியே நடந்து விடுகிறது என பேசிக்கொள்கிறார்கள். குறிப்பாக அதிமுக விவகாரம் குறித்து தமிழிசை பேட்டியளித்தால் போதும், தமிழிசையே சொல்லிட்டாங்க அப்புறம் என்ன அது தான் நடக்க போகுது என கூறும் அளவுக்கு சரியாக கணித்து கூறுகிறார்.


 
 
இது அவருடைய துல்லியமான கணிப்பா அல்லது மத்தியில் அவரது கட்சி ஆட்சியில் இருக்கிறது, அந்த செல்வாக்கினால் சொல்கிறாரா என்பது நமக்கு தெரியாது. இந்நிலையில் இந்த வரிசையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும் இணைந்துள்ளார்.
 
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இன்று பேட்டியளித்த எச்.ராஜா, சசிகலாவுக்கு துணையாக டி.டிவி.தினகரனும் சிறைக்கு செல்வார் என ஆரூடம் கூறியுள்ளார்.
 
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு டெல்லி போலீஸ் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இதில் அவர் விசாரணைக்கு நாளைக்கே ஆஜராக வேண்டும் எனவும் கூறியுள்ளது டெல்லி போலீஸ்.
 
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக இருக்கும் தினகரன் மீது வலுவான குற்றச்சாட்டுகளும், அதற்கான வலுவான ஆதராங்களும் இருப்பதால் ஒருவேளை அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வருகிறது. அப்படியென்றால் எச்.ராஜா கூறியது நடந்துவிடுமோ?.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments