Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுச்செயலாளர் கையெழுத்து இல்லை: மதுசூதனனுக்கு இரட்டை இலை கிடைக்குமா?

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2017 (18:30 IST)
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியின் அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கக்கூடாது என்று தேர்தல் அதிகாரிகளிடம் தினகரன் ஆதரவாளர்கள் வாக்குவாதம் செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொதுவாக அதிமுகவின் நடைமுறையின்படி சின்னம் ஒதுக்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் 2B என்ற படிவத்தில் கையெழுத்திட வேண்டும். ஆனால் மதுசூதனன் வேட்புமனுவில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரின் கையெழுத்து மட்டுமே உள்ளது. பொதுச்செயலாளர் கையெழுத்து இல்லாததால் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கக்கூடாது என்று தினகரன் ஆதரவாளர்கள் செந்தில்பாலாஜி மற்றும் வெற்றிவேல் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு அதற்கு பதிலாக  ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவியை பொதுக்குழு கூடி அங்கீகரித்துள்ளதாக அதிமுகவினர் தரப்பினர் பதிலளித்து வருகின்றனர். இதனால் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments