ஜெ. பாணியில் தினகரன்: மக்கள் மத்தில் வரவேற்பு!

Webdunia
வியாழன், 15 பிப்ரவரி 2018 (19:28 IST)
ஆர்.கே.நகர் எம்எல்ஏ தினகரன் பொதுமக்களிடம் பேசும் போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பாணியில் பேசி மக்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். 
சமீபத்தில் தஞ்சாவூரில் தினகரன் பின்வருமாறு பேசியுள்ளார். தமிழகத்தில் தற்போது நடப்பது ஜெயலலிதா ஆட்சி அல்ல. மத்திய பாஜகவின் பினாமி ஆட்சி. கமிஷன் மண்டி ஆட்சி. ஓ.பன்னீர்செல்வத்தை சசிகலா முதல்வராக்கினார். அவர் மத்திய அரசின் ஏஜென்டாக மாறியதால், அவரை பதவியில் இருந்து தூக்கினோம்.
 
சசிகலா சிறை சென்றவுடன் பழனிசாமியை முதல்வராக்கினோம். ஆனால், அவரோ பாஜக மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து கட்சியைக் கைப்பற்றினார். ஆனாலும், 90 சதவீதம் தொண்டர்கள் எங்கள் பக்கமே உள்ளனர்.
 
பின்னர் ஜெயலலிதா பாணியில், எங்கள் கட்சி நிர்வாகிகள் யாரும் உங்களுக்கு பணம் கொடுத்து இங்கு அழைத்து வந்தார்களா? என கூட்டத்தைப் பார்த்துக் கேட்டார். அப்போது ஆரவாரமான மக்கள், இல்லை, நாங்களாகவே வந்தோம் என தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பயணிகளே.. சாப்பாடு வேணும்னா நாங்களே தறோம்! அதை மட்டும் செய்யாதீங்க! - அவமதித்த ஸ்விட்சர்லாந்து ஹோட்டல்கள்!

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிக்கிய வடசென்னை தாதா நாகேந்திரன் காலமானார். இறுதிச்சடங்கில் பாதுகாப்பு..!

சந்திரசேகர் ராவின் மகன் உள்பட அரசியல் பிரபலங்கள் வீட்டுக்காவல்.. தெலுங்கானாவில் பரபரப்பு..!

200 இடங்களுக்கு மேல் திமுக வெற்றி பெறும்.. ஜோசியம் எல்லாம் சொல்ல முடியாது: அமைச்சர் எ.வ.வேலு

தனித்தேர்வர்களின் +2 மதிப்பெண் சான்றிதழ்களை அழிக்க முடிவு! - அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments