ஸ்டாலின் குடும்பத்தை தவிர மற்ற யாருக்கும் பாதுகாப்பு இல்லை.. திருமண விழாவில் தினகரன் பேட்டி..!

Siva
வியாழன், 11 ஜூலை 2024 (15:15 IST)
கும்பகோணத்தில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழத்தை சேர்ந்த தினகரன் தமிழகத்தில் ஸ்டாலின் குடும்பத்தை தவிர வேறு யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
 
தினமும் மூன்று நான்கு கொலைகள் தமிழகத்தில் நடக்கிறது என்றும் அதில் கைதாகும் இளைஞர்கள் எல்லாம் 20 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்றும் தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ள கஞ்சா கலாச்சாரம் போதை கலாச்சாரம் காரணமாக இளைஞர்கள் அதற்கு அடிமையாகி குற்றங்களை செய்து வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
5000 10,000 ரூபாய் கொடுத்தால் கூட கொலை செய்யும் கூலிப்படை ஆட்களாக நிறைய இளைஞர்கள் மாறி வருகிறார்கள் என்றும் எனவே தமிழக அரசு சட்டம் ஒழுங்கை சரியாக பராமரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
தமிழகத்தில் யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது என்றும் முதல்வர் குடும்பத்தை தவிர வேறு யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தினால் மட்டுமே சட்டம் ஒழுங்கு சரியாகும் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார் 
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்