Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்களும் போவோம்ல: தினகரன் தலைமையில் அமமுகவினர் ஜெ.நினைவிடம் நோக்கி பேரணி

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (12:47 IST)
ஜெயலலிதா 2ஆம் நினைவு தினத்தையொட்டி தினகரம் சார்பில் அமமுகவினர் மெரினாவை நோக்கி அமைதி பேரணி நடத்தி வருகின்றனர்.
 
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று, பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார்.
 
இன்று அவரது இன்று இரண்டாவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. சற்று நேரத்திற்கு முன்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, உள்ளிட்ட பலர் அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும், கட்சிப் பிரமுகர்களும், தொண்டர்களும் வாலாஜா சாலையிலிருந்து ஜெயலலிதா நினைவிடத்தை நோக்கி அமைதி பேரணி சென்றனர். பின்னர் ஜெயலலிதா படத்தை வணங்கி அவருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 
 
இந்நிலையில் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ஆத ரவாளர்களுடன் வாலாஜா சாலையிலிருந்து ஜெயலலிதா நினைவிடத்தை நோக்கி அமைதி பேரணி சென்றுகொண்டிருக்கிறார். அவரும் சற்று நேரத்தில் ஜெ நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த இருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments