Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.எல்.ஏக்களுடன் கருத்து வேறுபாடா? மனம் திறந்த டிடிவி தினகரன்

Webdunia
சனி, 27 அக்டோபர் 2018 (11:06 IST)
18 எம்.எல்.ஏக்களுக்குள் கருத்து மோதல் என கிளம்பிய வதந்திக்கு தினகரன் விளக்கமளித்துள்ளார்.
 
தமிழக அரசியலில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்பு வெளியானது. சபாநாயகர் தனபால் எடுத்த நடவடிக்கை தவறில்லை என கூறி 18 எம்.எல்.ஏக்களின் மனு தள்ளுபடி செய்து நீதிபதி சத்யநாராயணா தீர்ப்பளித்தார்.   
 
இதைத் தொடர்ந்து,  எம்.எல்.ஏக்களுடன் தினகரன் ஆலோசனை நடத்தினார். அதன்பின், இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து 30ஆம் தேதி மேல்முறையீடு செய்ய உள்ளதாக தங்கத்தமிழ்ச்செல்வன் அறிவித்துள்ளார்.
 
இதனிடையே ஆலோசனைக்கூட்டத்தில் 18 எம்.எல்.ஏக்களும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
 
இந்நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், எம்.எல்.ஏ க்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் ஏற்படவில்லை. அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களை பிரிக்க நினைப்பவர்களின் ஆசை ஒருபோதும் பலிக்காது. எங்களை அழிக்க நினைப்பவர்களுக்கு விரைவில் பாடம் புகட்டுவோம் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments