Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி- 3 மாதக் குழந்தை பலி!

Webdunia
திங்கள், 13 மார்ச் 2023 (18:33 IST)
திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலையில் தனியார் குழந்தைகள்  நலக் காப்பகத்தில் திடீரென்று 11 குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் மாம்பழம்சாலையில் தனியார் குழந்தைகள் நலக்காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்தக் குழந்தைகள் நலக்காப்பகத்தில்  பெற்றோர் இல்லாத குழந்தைகள், தொட்டில் குழந்தைத் திட்டத்தின் கீழ் மீட்க்கப்பட்ட பல குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது, இந்தக் குழந்தைள் நலக்காப்பகத்தில் 32 குழந்தகள் வளர்க்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் 11 குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டு வாந்தி மயக்கமும் ஏற்பட்டது.

இதையடுத்து, குழந்தைகள் 11 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில், 3 மாதக் குழந்தை ஒன்று  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த நிலையில், குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள வாந்தி,. மயக்கத்திற்கு காரணம் என்ன என்று மாவட்ட ஆட்சியர் விசாரணை  நடத்தியுள்ளார்.

இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments