Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ.வை பொதுச்செயலாளர் ஆக்கியதே நாங்கள்தான் - திவாகரன் அதிரடி

Webdunia
வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (09:27 IST)
தமிழக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பொதுச்செயலாளர் ஆக்கியதே நாங்கள்தான் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.


 

 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனை நியமித்தது சட்டவிரோதம் எனவும், அவர் சமீபத்தில் நியமனம் செய்த நிர்வாகிகள் பட்டியல் செல்லாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
இதுகுறித்து, சசிகலாவின் சகோதரரான திவாகரன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போது “ எம்.ஜி.ஆர் மறைந்த போது அதிமுகவிற்கு ஏற்பட்ட நெருக்கடியை போல் தற்போது ஏற்பட்டுள்ளது. அப்போது, 16 மாவட்ட செயலாளர்களிடம் கையெழுத்து வாங்கி, ஜெயலலிதாவை பொதுச்செயலாளர் ஆக்கியதே நாங்கள்தான்.  தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு இன்னும் மூன்று மாதங்களில் தீர்வு காணப்படும். வருகிற 14ம் தேதி மேலூர் பொதுக்கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகும்” என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments