Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ.வை பொதுச்செயலாளர் ஆக்கியதே நாங்கள்தான் - திவாகரன் அதிரடி

Webdunia
வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (09:27 IST)
தமிழக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பொதுச்செயலாளர் ஆக்கியதே நாங்கள்தான் என சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.


 

 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனை நியமித்தது சட்டவிரோதம் எனவும், அவர் சமீபத்தில் நியமனம் செய்த நிர்வாகிகள் பட்டியல் செல்லாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
இதுகுறித்து, சசிகலாவின் சகோதரரான திவாகரன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போது “ எம்.ஜி.ஆர் மறைந்த போது அதிமுகவிற்கு ஏற்பட்ட நெருக்கடியை போல் தற்போது ஏற்பட்டுள்ளது. அப்போது, 16 மாவட்ட செயலாளர்களிடம் கையெழுத்து வாங்கி, ஜெயலலிதாவை பொதுச்செயலாளர் ஆக்கியதே நாங்கள்தான்.  தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு இன்னும் மூன்று மாதங்களில் தீர்வு காணப்படும். வருகிற 14ம் தேதி மேலூர் பொதுக்கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகும்” என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனை முறை நீக்கினாலும் மீண்டும் மீண்டும் வரும் பெண்களின் அந்தரங்க வீடியோ.. சென்னை ஐகோர்ட் வேதனை..!

டிகிரி இருந்தா போதும்.. கூட்டுறவு சங்கங்களில் 2000 உதவியாளர் வேலை! - உடனே அப்ளை பண்ணுங்க!

3வது நாளாக இன்றும் உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.75000ஐ தாண்டியதால் அதிர்ச்சி..!

பறிபோன ஐ.டி வேலை.. கழுத்தை நெறித்த கடன்! கொள்ளையனாக மாறிய ஐ.டி ஊழியர்!

டிரம்ப் மிரட்டலால் எந்த பிரச்சனையும் இல்லை.. மீண்டும் உயரும் பங்குச்சந்தை..

அடுத்த கட்டுரையில்
Show comments