அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை! – டிஜிபி எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (09:53 IST)
மத்திய மற்றும் மாநில அரசுகளின் சின்னத்தை அனுமதியின்றி வாகனங்களில் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் சின்னங்கள் அரசு அதிகாரிகள், ஆளும் கட்சி அமைச்சர்கள் உள்ளிட்டோர் வாகனங்களில் பயன்படுத்தப்படுவதற்கு அனுமதி உள்ளது. ஆனால் சில முன்னாள் அமைச்சர்கள், அரசின் ஒப்பந்த வாகனங்களிலும் இந்த சின்னங்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து எச்சரிக்கை செய்துள்ள தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, அனுமதியின்றி மத்திய மாநில அரசுகளின் சின்னங்கள் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஒப்பந்த வாகனங்களில் பயன்படுத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments