Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் வேட்டி சேலைகளை திருடிய துணை தாசில்தார்

Webdunia
சனி, 7 ஜனவரி 2017 (16:08 IST)
திருவாரூர் அருகே பொங்கலுக்கு வழங்க இருந்த இலவச வேட்டி சேலைகளை திருடிய துணை தாசில்தார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.


 

 
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா அலுவலகத்தில் பொங்கல் பண்டிகைக்கு வழக்கமாக வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் 35 மூட்டைகளில் வைக்கப்பட்டு இருந்தது. 
 
இதை நன்னிலம் தேர்தல் துணை தாசில்தார் சிங்காரவேலு(35) என்பவர் வாகனத்தில் எடுத்துச் சென்றார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
 
விசாரணையில் சிங்காரவேலு வேட்டி, சேலைகளை திருடிச் சென்று விற்றது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை.. விஜய் பிறப்பித்த முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments