Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெங்கு பாதிப்பு நிலவரம் ஆய்வு; மத்திய அரசின் மருத்துவ குழு

Webdunia
சனி, 14 அக்டோபர் 2017 (16:53 IST)
தமிழகத்தில் டெங்கு பாதிப்பின் நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக 5 பேர் கொண்ட மத்திய அரசின் மருத்துவ குழுவினர் இரண்டாவது நாளாக சேலம் மாவட்டத்தில் ஆய்வைத் தொடர்ந்துள்ளனர்.

 
இந்த குழுவில் அசுதோஷ் பீஷ்வாஸ், ஸ்வாதி துப்லிஸ், கவுஷல் குமார், கல்பனா பர்வா, வினய் கரக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். நேற்று, சென்னையில் தனது ஆய்வை தொடங்கிய இந்தக் குழு, இன்று இரண்டாவது நாளாக சேலம் மாவட்டம்  ஓமலூரில் தங்கள் ஆய்வைத் தொடங்கியுள்ளனர்.
 
உயிர்க்கொல்லி நோயாக டெங்கு காய்ச்சல் பல்கிப் பெருகி வருகிறது. நாள்தோறும் 10 பேராவது டெங்குவிற்கு பலியாவது தொடர்கதையாகி வருகிறது. டெங்குவை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு முயற்சிகளில் அரசுடன் இணைந்து அரசியல்  கட்சிகள், தொண்டு நிறுவனங்களும் களத்தில் இறங்கியுள்ளனர்.
 
இந்த குழுவினர் சேலம், தருமபுரியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மற்ற மாவட்டங்களைக் காட்டிலும், சேலம்  மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments