Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி - ஜனநாயகத்திற்கு தோல்வி: மகேந்திரன் குற்றச்சாட்டு

ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி - ஜனநாயகத்திற்கு தோல்வி: மகேந்திரன் குற்றச்சாட்டு
, செவ்வாய், 30 ஜூன் 2015 (23:57 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ஜனநாயகம் தோற்றுவிட்டது என இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன் வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து, ஒரு தொலைக்காட்சி செய்தி சேனல் ஒன்றில், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன் கூறியதாவது:-
 
ஆர்.கே. நகரில், தமிழக அமைச்சர்கள் அனைவரும் ஈடுபட்டு, இலவசங்களையும், சலுகைகளையும் மட்டுமே முன்வைத்து பிரச்சாரம் செய்தனர். அதனால், ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ஜனநாயகம் தோற்றுவிட்டது.
 
இந்த தேர்தலில், நாங்கள் வெற்றியை எதிர்பார்த்து போட்டியிடவில்லை. தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடாக இருந்தது. இப்போது நாங்கள் பெற்றுள்ள வாக்குகள் எங்களுக்கு மகிழ்ச்சியளிகின்றது என்றார்.
 

Share this Story:

Follow Webdunia tamil