Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரனை விசாரிக்க டெல்லி போலீசார் வரவில்லை - பின்னணி என்ன?

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (15:15 IST)
இரட்டை இலை சின்னத்தை பெற ரூ.60 கோடி லஞ்சம் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து தினகரனிடம் விசாரணை செய்ய, இன்று சென்னை வருவதாக இருந்த டெல்லி போலீசாரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


 

 
டெல்லியில் நேற்று காலை சுகேஷ் சந்தர் என்பவரை டெல்லி போலீசார் கைது செய்தனர். இரட்டை இலை சின்னத்தை, தினகரன் தரப்பிற்கு பெற்றுத்தர ரூ.1.30 கோடி முன்பணம் பெற்றதாக அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 
 
எனவே,  தினகரனிடம் விசாரணை செய்வதற்காக டெல்லி போலீசார் இன்று சென்னை வருவார்கள் என தெரிவிக்கப்பட்டது.  போலீசாருக்காக விமான பயண சீட்டுகள் நேற்று முன்பதிவு செய்யப்பட்டன. ஆனால், அவை திடீரெனெ ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லி போலீசாரின் சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.
 
கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்தரிடம் தொடர்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதால், அவரிடமிருந்து முழுமையான தகவல்களை திரட்டி பிறகு டெல்லி போலீசார் சென்னை வருவார்கள் என டெல்லி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

கணவர் இறந்தது தெரியாமல் 5 நாட்களாக ஒரே வீட்டில் வசித்த மனைவி.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments