Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜியை பரிசோதனை செய்ய டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் வருகையா?

Webdunia
புதன், 14 ஜூன் 2023 (08:20 IST)
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சென்னை பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுவதாகவும் தேவைப்பட்டால் ஆஞ்சியோ சிகிச்சை தேவைப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 
 
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலையை பரிசோதனை செய்ய டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சென்னை வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு என்று காலை 11 மணியளவில் சென்னை வருவார்கள் என்று கூறப்படுகிறது. எய்ம்ஸ் மருத்துவர்களின் பரிசோதனைக்கு பின் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி முடிவு எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது. 
 
மேலும் செந்தில் பாலாஜியை டெல்லி அழைத்துச் சென்று விசாரணை செய்யவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை இன்று சரிவு.. ஆனாலும் ரூ.72000ஐ நெருங்கியது ஒரு சவரன்..!

பள்ளிகளில் கோச்சிங் செண்டர் நடத்த தடை? மாநில கல்விக் கொள்கை குழு பரிந்துரை!

மீனாட்சி அம்மன் கோவிலில் விதியை மீறிய அமித்ஷா.. காங்கிரஸ் எம்பி கண்டனம்..!

சென்னையில் தரையிறங்கிய விமானத்தின் மீது மீண்டும் லேசர் ஒளி.. சமூக விரோதிகள் செயலா?

கலிஃபொர்னியா கலவரம்! கவர்னரை கைது செய்ய ட்ரம்ப் திட்டம்? 2000 காவல்படையினர், 700 கடற்படையினர் குவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments