Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு! – உயர்கல்வித்துறை அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (12:02 IST)
தமிழ்நாட்டில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான மாநில பாடத்திட்ட பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பொறியியல் படிப்புகள், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை பணி தொடங்கு மும்முரமாக நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் தேதி நேற்றுடன் முடிவடைந்தது. அதுபோல பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி ஜூலை 17 என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது வரை சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகாமல் உள்ளன. இதனால் அவர்கள் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க பொறியியல் பட்டப்படிப்புகள் மற்றும் கலை, அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்குன் தேதி நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சிபிஎஸ்சி மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியானதிலிருந்து அடுத்த 5 நாட்கள் வரை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய்லாந்தில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதி.. ஒரே நாளில் 200 திருமணங்கள்..!

டங்க்ஸ்டன் ரத்து: ஒன்றிய அரசு பணிந்துள்ளது: முதல்வர் ஸ்டாலின்.. மோடிக்கு நன்றி.. அண்ணாமலை..!

மெட்டா, வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.. அதிரடி உத்தரவு..!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை நடவடிக்கை..!

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டம் ரத்து.. அண்ணாமலை சொன்னபடி வந்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments