Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு! – உயர்கல்வித்துறை அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (12:02 IST)
தமிழ்நாட்டில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான மாநில பாடத்திட்ட பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பொறியியல் படிப்புகள், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை பணி தொடங்கு மும்முரமாக நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் தேதி நேற்றுடன் முடிவடைந்தது. அதுபோல பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி ஜூலை 17 என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது வரை சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகாமல் உள்ளன. இதனால் அவர்கள் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க பொறியியல் பட்டப்படிப்புகள் மற்றும் கலை, அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்குன் தேதி நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சிபிஎஸ்சி மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியானதிலிருந்து அடுத்த 5 நாட்கள் வரை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments