எடப்பாடி பழனிச்சாமியின் சட்டையை பிடித்து இழுத்து வந்த தினகரன்: பரபரப்பு தகவல்!

எடப்பாடி பழனிச்சாமியின் சட்டையை பிடித்து இழுத்து வந்த தினகரன்: பரபரப்பு தகவல்!

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (13:07 IST)
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுக்க அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சசிகலா தலைமையில் கூவத்தூர் ரிசார்ட்டில் தேர்ந்தெடுத்தனர். அப்போது அவரை பரிந்துரைக்க தினகரன் அவரது சட்டையை பிடித்து இழுத்து வந்ததாக தீபக் கூறியுள்ளார்.


 
 
தமிழக அரசியலில் குறிப்பாக அதிமுகவில் கடந்த சில தினங்களாக பல்வேறு சர்ச்சையான மர்ம தகவல்கள் வந்தவாறு உள்ளன. இவை அனைத்தும் ஜெயலலிதா மரணம், சசிகலா, தினகரன் குடும்பத்தை பற்றியே வருகின்றன.
 
இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் கூறிய கருத்து ஒன்று தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தீபக், ஆளுநரை பார்த்து ஜெயலலிதா கட்டை விரலை காட்டி சைகை செய்ததாக கூறியது பொய் என கூறினார். மேலும் ஜெயலலிதா மருத்துவமனையில் மூன்றே நாட்கள் தான் சுயநினைவோடு இருந்ததாக கூறினார்.
 
அதுமட்டுமல்லாமல், கூவத்தூரில் சசிகலா தலைமையில் முதல்வரை தேர்ந்தெடுக்க நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதலில் செங்கோட்டையன் தான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டாராம். ஆனால் செங்கோட்டையன் வேண்டாம், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகட்டும் என கூறியது தினகரன் தானாம். அப்போது தினகரன் எடப்பாடி பழனிச்சாமியின் சட்டையை பிடித்து இழுத்து வந்து அவரை பரிந்துரைத்ததாக தீபக் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுதந்திர இந்தியாவில் முதல் வாக்கு திருட்டில் ஈடுபட்டவர் நேருதான்.. அமித்ஷா

பொறியியல் கல்லூரி மாணவரை கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்த காதலியின் குடும்பம்.. போலீஸ் விசாரணை..!

காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யை சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதி சஸ்பெண்ட்! பரபரப்பு தகவல்..!

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அடுத்த கட்டுரையில்
Show comments