Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் அரசியல் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன்: தீபா பேட்டி

Mahendran
சனி, 24 பிப்ரவரி 2024 (13:47 IST)
இப்போதைக்கு அரசியல் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பேட்டி அளித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபா அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அம்மா என்று அன்போடு அழைக்கப்பட்டவர் ஜெயலலிதா என்றும் அவர் இன்று இருந்திருந்தால் பலர் நன்மை அடைந்திருப்பார்கள் என்றும் அவரது இழப்பை இன்று நாடு நினைத்துப் பார்க்கிறது என்றும் தெரிவித்தார்.

அவரது நினைவாக இன்று குடும்பத்தினர் அனைவரும் அவரது புகைப்படத்திற்கு மரியாதை செய்தோம் என்றும் மேலும் அன்னதானம் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடந்தது என்றும் தெரிவித்தார்.

மேலும் மக்களவைத் தேர்தல் வர இருக்கும் நிலையில் நீங்கள் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த தீபா, இப்போதைக்கு அரசியல் வேண்டாம் என்றும், அரசியலில் இருந்து விலகி இருக்க முடிவு செய்ததாகவும் வருங்காலத்தில் என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியாது ஆனால் இப்போதைக்கு அரசியல் செய்யும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments