Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபா சுயேட்சை வேட்பாளர்: அந்த பேரவையை இன்னமும் பதிவு செய்யவில்லையாம்!

தீபா சுயேட்சை வேட்பாளர்: அந்த பேரவையை இன்னமும் பதிவு செய்யவில்லையாம்!

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2017 (15:05 IST)
ஆர்கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று நிறைவடைந்ததையடுத்து, அதனை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.


 
 
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா வேட்புமனுத் தாக்கல் செய்தார். இவரது வேட்புமனுவில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக கூறப்படுகிறது. அவரது கணவரின் பெயரை குறிப்பிடாமல் ஜெயகுமாரின் மகள் என்று தான் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும் கணவரின் வங்கிக்கணக்கு உள்ளிட்ட அவரது சொத்து விவரங்களுக்கு பதில் அளிக்காமல் ஏதுமில்லை என்று தான் குறிப்பிட்டுள்ளார்.
 
தீபா சில வாரங்களுக்கு முன்னர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற ஒரு அமைப்பை ஆரம்பித்தார். அதன் சார்பாக தீபா போட்டியிடுவதாக கூறினார். ஆனால் தனது வேட்புமனுவில் தான் சுயேட்சை வேட்பாளர் என்று தான் குறிப்பிட்டுள்ளார். இதற்கு காரணம் அவர் தனது பேரவையை இன்னமும் பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments