Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபா வேட்பு மனுவில் தனது பெயர் இல்லை ; மாதவன் விளக்கம்

Webdunia
திங்கள், 27 மார்ச் 2017 (11:37 IST)
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவின் வேட்பு மனுவில், அவர் தனது கணவர் மாதவன் பெயரை குறிப்பிடவில்லை.


 

 
தீபாவிற்கும் அவரது கணவர் மாதவனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மாதவன் தனிக்கட்சி தொடங்கியதாக கூறப்பட்டது. மேலும், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுவில் தீபா தனது கணவரின் பெயரை குறிப்பிடவில்லை. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள தீபாவின் கணவர் மாதவன் “ எங்களிடையே எந்த குடும்ப பிரச்சனையும் இல்லை. வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, பதட்டத்தில் தீபா எனது பெயரை எழுத மறந்துவிட்டார். வேறு எந்த காரணமும் இல்லை. யாருடைய தூண்டுதலின் பேரிலும் நான் தனிக்கட்சி தொடங்கவில்லை. எனது ஆதரவாளர்களின் விருப்பத்தின் பேரிலேயே நான் கட்சி தொடங்கினேன்” என அவர் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments