Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீபா வேட்பு மனுவில் தனது பெயர் இல்லை ; மாதவன் விளக்கம்

தீபா வேட்பு மனுவில் தனது பெயர் இல்லை ; மாதவன் விளக்கம்
, திங்கள், 27 மார்ச் 2017 (11:37 IST)
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவின் வேட்பு மனுவில், அவர் தனது கணவர் மாதவன் பெயரை குறிப்பிடவில்லை.


 

 
தீபாவிற்கும் அவரது கணவர் மாதவனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மாதவன் தனிக்கட்சி தொடங்கியதாக கூறப்பட்டது. மேலும், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுவில் தீபா தனது கணவரின் பெயரை குறிப்பிடவில்லை. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள தீபாவின் கணவர் மாதவன் “ எங்களிடையே எந்த குடும்ப பிரச்சனையும் இல்லை. வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, பதட்டத்தில் தீபா எனது பெயரை எழுத மறந்துவிட்டார். வேறு எந்த காரணமும் இல்லை. யாருடைய தூண்டுதலின் பேரிலும் நான் தனிக்கட்சி தொடங்கவில்லை. எனது ஆதரவாளர்களின் விருப்பத்தின் பேரிலேயே நான் கட்சி தொடங்கினேன்” என அவர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி என்னும் கோமாளி