Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினகரன் மீது கமிஷனர் அலுவலகத்தில் தீபா பரபரப்பு புகார்...

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2017 (13:47 IST)
போயஸ்கார்டன் இல்லத்தில் தன்னை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெ.வின் அண்ணன் மகள் தீபா சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.


 

 
கடந்த 11ம் தேதி காலை தீபா, ஜெ. வாழ்ந்து வந்த போயஸ்கார்டன் இல்லத்துக்கு சென்றார். அங்கு அவரின் சகோதரர் தீபக்கும் இருந்தார். ஆனால், தன்னை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை எனவும், அங்கு காவலுக்கு இருக்கும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தினர் தன்னை தாக்கியதாகவும் தீபா புகார் கூறினார். மேலும், சசிலாவோடு சேர்ந்து கொண்டு தனது சகோதரர் தீபக் சதி செய்கிறார் எனவும், அவர்தான் தன்னை அங்கு வர சொன்னதாகவும் கூறினார்.  
 
அதுமட்டுமில்லாமல், தனது அத்தை வாழ்ந்த போயஸ்கார்டன் வீடு தங்களுக்கு சொந்தம் எனவும், அதை சசிகலா மற்றும் தினகரன் தரப்பு பறிக்க முயல்வதாகவும் புகார் கூறினார். அதன் பின் ஒருவழியாக போலீசார் அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
 
இந்நிலையில், இன்று காலை சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தீபாவின் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் ஒரு புகார் மனு அளித்தனர்.  அதில், கடந்த 11ம் தேதி போயஸ் கார்டனில், தினகரனின் தூண்டுதலின் பேரில் தீபாவின் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். அவர்களை கைது செய்ய வேண்டும்” என அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் வீடுகளை இழந்த தமிழர்களின் வங்கிக்கணக்கில் பணம்.. தமிழக அரசு அனுப்பியது..!

திமுகவை இன்னும் 8 மாதங்களில் வீட்டுக்கு அனுப்பிவிடுவோம்: பாமக கூட்டத்தில் அன்புமணி பேச்சு

ஃபாஸ்டேக் ஆண்டு சந்தா அறிமுகம்.. ஒரு ஆண்டுக்கு எவ்வளவு? ஆண்டு சந்தா கட்டினாலும் சில நிபந்தனைகள்..!

நல்லவேளை உயிர் பிழைத்தேன்.. தேனிலவுக்கு முன் காதலனுடன் ஓடிப்போன மணப்பெண்ணின் கணவர் பேட்டி..!

சுங்கச்சாவடிகளில் வருடாந்திர FASTag! ஆகஸ்டு 15 முதல்..! - மத்திய அமைச்சர் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments