Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு நாட்கள் விடுமுறை: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (20:20 IST)
உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய இரண்டு நாட்கள் பொதுவிடுமுறை என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
 
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 27 மாவட்டங்களில் டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில் தேர்தல் நடைபெறும் இரண்டு நாட்களும் அந்த மாவட்டங்களில் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எல். சுப்பிரமணியன் கடிதம் எழுதியிருந்தார்.
 
இந்த கடிதத்தின் அடிப்படையில் சற்றுமுன் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 27 மாவட்டங்களில் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பொது விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், அரசின் கட்டுப்பாட்டின் உள்ள அமைப்புகள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments