Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 வேட்பாளர்கள் மரணம்: தமிழகத்தில் 2 வார்டுகளில் தேர்தல் ரத்து

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (18:18 IST)
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி  நகராட்சி நடைபெற உள்ள நிலையில்  இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.  இந் நிலையில் இரு வார்டுகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் திமுக வேட்பாளர் ஒருவர் இன்று மராடைப்பால் மரணம் அடைந்துள்ளார். இரு நாட்களுக்கு முன் மற்றொரு வார்டில் தேர்தலில் போட்டியிட இருந்த திமுக வேட்பாளர் இறந்துள்ளார்.

இவர்களின் மரணத்திற்குக் காரணம் என்ன என போலீஸார் விசாரித்தனர். தேர்தலுக்காக தொடர்ந்து பிரச்சாரம் உள்ளிட்ட வேலைகளில் தொடர்ந்து  ஈடுபட்டதால் மரணம் ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஈரொடு மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சியில் 2 வது வார்டிற்கு  போட்டியிட இருந்த சித்துரெட்டி மற்றும் அத்தாணி பேருற்றாட்சி 3 வது வார்டில் வேட்பாளராக இருந்த ஐயப்பன் ஆகிய இருவரும் இறந்த காரணத்தால் இந்த இரு வார்டுகளுக்கும் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments