Webdunia - Bharat's app for daily news and videos

Install App

NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! புதிய தேதி அறிவிப்பு..!

Mahendran
சனி, 25 ஜனவரி 2025 (10:36 IST)
NMMS தேர்வுக்கு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு புதிய தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
2024-25 ஆம் ஆண்டிற்கான தேசிய வருவாய் மற்றும் தகுதி படிப்பு உதவி தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல், கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜனவரி 29 வரை நீடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ’2024-25 ஆம் ஆண்டிற்கான தேசிய வருவாய்  மற்றும் தகுதி  படிப்பு உதவி தொகை திட்ட தேர்வு பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தால் மற்றும் கட்டண தொகை செலுத்துவதற்கு கடைசி நாள் ஜனவரி 25 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
 
தற்போது மாணவர்களின் நலன் கருதி தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் ஜனவரி 29 மாலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட விவரத்தினை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மேற்குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் கால அவகாசம் நீடிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நாள்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் பேச்சு..!

நெல்லை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை: பள்ளி மாணவன் கைது

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments