Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு அன்புமணி ராமதாஸால் நல்ல காலம் வரப்போகிறது - ராமதாஸ்

தமிழகத்திற்கு அன்புமணி ராமதாஸால் நல்ல காலம் வரப்போகிறது - ராமதாஸ்

Webdunia
ஞாயிறு, 7 பிப்ரவரி 2016 (11:01 IST)
தமிழகத்திற்கு இன்னும் 2 மாதத்தில் அன்புமணி ராமதாசால் நல்ல காலம் வரப்போகிறது என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

 
பாமகவின் 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கையின் விளக்க பொதுக்கூட்டம் செய்யாறு சட்டமன்ற தொகுதியில் நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் எம்.பி. துரை தலைமை தாங்கினார்.
 
கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மருத்துவர் ராமதாஸ், ”தமிழகத்திற்கு இன்னும் 2 மாதத்தில் அன்புமணி ராமதாசால் நல்ல காலம் வரப்போகிறது. தமிழகத்தினை 50 ஆண்டு காலம் திமுக மற்றும் அதிமுக ஆட்சி செய்து சீரழித்துள்ளனர்.
 
ஊழல் மற்றும் லஞ்சம் பெருகியுள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைச்சலுக்கு விலை நிர்ணயம் செய்யமுடிவில்லை. விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் போட சொல்லி மாறி, மாறி கூட்டணி வைத்த போது கேட்டும் இரண்டு கட்சிகளும் போடவில்லை.
 
கடந்த காலங்களில் தொண்டர்களாகிய உங்கள் பேச்சை கேட்காமல் இரண்டு கட்சிகளுடன் மாறி, மாறி கூட்டணி வைத்து தவறு செய்துவிட்டேன். பாமக இனி தனித்து தான் போட்டியிடும். இல்லையேல் இந்த கட்சியே வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

Show comments