Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அத்துமீறிய மாமியார் கொடுமை.. ஆள் வைத்து தாக்கிய மருமகள் கைது..!

Siva
புதன், 16 ஏப்ரல் 2025 (07:32 IST)
மாமியார் கொடுமை அத்துமீறியதால் மருமகள் ஆள் வைத்து மாமியாரை தாக்கிய சம்பவம் ஜோலார்பேட்டை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜோலார்பேட்டை அருகே வசந்தி என்பவரை அவருடைய மாமியார் தொடர்ந்து கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த வசந்தி, தனது மாமன் மகன் மூலம் மாமியாரை பழிவாங்க திட்டமிட்டார்.

இதனை அடுத்து மாமன் மகன், வசந்தியின்  மாமியார் சாலையில் நடந்து கொண்டிருந்தபோது திடீரென தாக்கி அவரது கழுத்தில் இருந்த 4 சவரன் தங்க நகையையும் பறித்ததோடு சரமாரியாக தாக்கினார்.

இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்த போது மாமியார் உடனான தகராறு காரணமாக மருமகள் வசந்தி தான் ஆள் வைத்து தாக்குதலில் ஈடுபட்டது அம்பலமானது. மாமியார் தொடர்ந்து கொடுமை செய்து வந்ததால் அவரை பழி வாங்க மாமன் மகன் மூலம் இவ்வாறு செய்ததாக மருமகள் வசந்தி வாக்குமூலம் அழைத்தார்.

இதனை அடுத்து நகைகளை பறிமுதல் செய்த போலீசார், வசந்தி மற்றும் அவரது மாமன் மகன் மைக்கேல் ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் ஜோலார்பேட்டை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments