Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூடலூரில் 8 நாளாக டிமிக்கி கொடுத்த புலி சுட்டுக் கொலை

கூடலூரில் 8 நாளாக டிமிக்கி கொடுத்த புலி சுட்டுக் கொலை

கூடலூரில் 8 நாளாக டிமிக்கி கொடுத்த புலி சுட்டுக் கொலை
, சனி, 19 மார்ச் 2016 (17:07 IST)
நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடாமாடி வந்த புலியை அதிரடிப்படையினர் இன்று சுட்டுக் கொன்றனர். 8 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பின் இந்த புலி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது.


 
 
கூடலூரை அடுத்த தேவர்சோலை பகுதியில் உள்ள எஸ்டேட்டில் சுற்றிவந்த புலி, வட இந்தியர் ஒருவரை கடித்து கொன்றது. பல கால்நடைகளையும் இந்த புலி பலிவாங்கியது.
 
இதனால் அப்பகுதியில் கடந்த சில தினங்களாக பெரும் பதற்றம் நீடித்து வந்தது. இந்த புலியை பிடிக்க அப்பகுதியில் 5 இடங்களில் கூண்டுகளும், 30 இடங்களில் சிசிடிவி கேமராக்களும் அமைக்கப்பட்டது. இதில் 10 கேமராக்களில் புலியின் நடமாட்டம் பதிவானது.
 
இந்த புலியை பிடிக்க சிறப்பு அதிரடிப் படையினர், வனத் துறையினர், ஆயுதப் படையினர் என 50 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 8 நாளாக இந்த குழுக்கள் புலியை பிடிக்க போராடி வந்தது. இந்நிலையில் இன்று அந்த புலி அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது. இந்த சம்பவத்தின் போது அதிரடிப்படை வீரர்கள் இரண்டு பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil