Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாமக்கல்லில் மீண்டும் ஜாதிக் கலவர அபாயம்

நாமக்கல்லில் மீண்டும் ஜாதிக் கலவர அபாயம்
, வெள்ளி, 6 நவம்பர் 2015 (00:01 IST)
காதலை முன்வைத்து நாமக்கல் மாவட்டத்தில் மீண்டும் ஒரு ஜாதிக் கலவரத்தை அரங்கேற்றம் செய்ய ஒரு சில அமைப்புகள் ரகசியமாக தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
 

 
நாமக்கல்லில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஒரு சமூகத்துப் பெண், வேறு ஒரு சமூகத்து இளைஞனுடன் காதல் கொண்டு அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டனர். இந்த நிலையில், அவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் தற்போது சரண் அடைந்தனர்.
 
இந்த நிலையில், இந்த விவகாரத்தை முன்வைத்து ஜாதிக் கலவரத்தை அரங்கேற்றம் செய்ய சில அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நாமக்கல் மாவட்டத்தில் காவல்துறை மற்றும் மாவட்ட வருவாய்த்துறையின் நிர்வாக கோளாறு காரணமாகவே, அங்கு பல விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 
எனவே, இந்த விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா நேரிடையாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என அங்குள்ள சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

Share this Story:

Follow Webdunia tamil