Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனிதர்களுக்கு உடலில் பிரச்சனையை போல அணைக்கு மதகில் பிரச்சனை - எடப்பாடியாரின் அடடே விளக்கம்

Webdunia
வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (13:05 IST)
பருவ மாற்றத்தால் மனிதர்களுக்கு உடம்பில் காய்ச்சல் ஏற்படுவது போல வெள்ளப்பெருக்கினால் திருச்சி முக்கொம்பில் உள்ள மதகுகள் உடைந்துள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக கேரளா மட்டுமின்றி தென்னிந்தியாவின் பல பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன. 
 
அதிக அளவில் வெள்ள நீர் வெளியேறியதால் அழுத்தம் காரணமாக பழமையான திருச்சி முக்கொம்பில் உள்ள அணையின் 9 மதகுகள் அடித்து செல்லப்பட்டன.
இந்நிலையில் இன்று திருச்சி முக்கொம்பில் உள்ள அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், முக்கொம்பில் உடைந்த அணைக்குப் பதில் ரூ.325 கோடி மதிப்பில் புதிதாக கதவணை கட்டப்படும் என கூறினார்.
 
இதனையடுத்து செய்தியாளர்கள் இந்த விபத்திற்கான காரணம் குறித்து முதல்வரிடம் கேட்டனர். இதற்கு பதிலளித்த அவர், பருவமாற்றத்திற்கு மனிதர்களுக்கு காய்ச்சல் ஏற்படுவது போல வெள்ளப்பெருக்கால் அணையின் மதகுகள் உடைந்துவிட்டது என கூறியுள்ளார்.
முதல்வரின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் பயங்கர கேலிக்கும் கிண்டல்களுக்கும் ஆளாகியுள்ளது. முதலமைச்சர் எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறார் என பலர் கிண்டலடித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

தங்கம் விலை மீண்டும் குறைவு.. மீண்டும் ரூ.55,000க்குள் வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!

ஆர்.எஸ்.எஸ் வாக்குகளை பெற்று தான் பினராயி விஜயன் எம்.எல்.ஏ ஆனார்: காங்கிரஸ் கடும் தாக்கு

பரந்துர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினருக்கு சம்மன்.. 636வது நாளாக நீடிக்கும் போராட்டம்!

கலவரத்தால் நின்று போன தேர்தல்..! இன்று மணிப்பூரில் பலத்த பாதுகாப்புடன் மறுதேர்தல்!

காவி என்பது தியாகத்தின் வண்ணம்.. தூர்தர்ஷன் விவகாரத்திற்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments