Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 நாள் மழைக்கு கிடுகிடுவென நிரம்பிய அணை! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Prasanth Karthick
செவ்வாய், 20 மே 2025 (08:49 IST)

தொடர் மழை காரணமாக கேஆர்பி அணை நிரம்பி வருவதால் மூன்று மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஆண்டில் வெயில் காலத்திலேயே அதிக அளவு மழை பெய்துள்ள நிலையில் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

 

ஓசூர், கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கேஆர்பி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 4,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

 

இதனால் தென்பெண்ணை ஆற்றங்கரையோர மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அம்மாவட்டங்களில் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மே மாதத்திலேயே கடும் கனமழையும், வெள்ள எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது மக்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கூட்டணிக்கு திருமா வருவாரா? திமுகவின் பிளான் B என்ன?

திருந்தவே மாட்டீங்கள்ல..? இந்தியா அழித்த பகுதிகளில் மீண்டும் பயங்கரவாத முகாம்கள்! பாகிஸ்தான் தந்திர வேலை!

திருமணமான நபருடன் தகாத உறவு.. பெண்ணின் ஆடையை கிழித்து மொட்டையடித்த சம்பவம்.. பெரும் அதிர்ச்சி..!

9 கொலைகள்! ஜப்பானை உலுக்கிய சைக்கோ கில்லர்! - மரண தண்டனை நிறைவேற்றம்!

14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தாய்! - சிறுமி அளித்த பகீர் புகார்!

அடுத்த கட்டுரையில்
Show comments