Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக்கடலில் மிதிலி புயல்: 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2023 (12:57 IST)
வங்கக் கடலில் மிதிலி புயல் தோன்றியுள்ளதை அடுத்து தமிழகத்தில் உள்ள ஒன்பது துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தோன்றியது புயலாக மாறி உள்ளதாகவும் இந்த புயலுக்கு மிதலி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு திசை நோக்கி சென்று வங்கதேசத்தில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மிதிலி புயல் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வரும் நிலையில் ஒன்பது துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு  ஏற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிக் பாஸ் செட் அமைக்கும் போது ஏற்பட்ட விபத்து: வடமாநில தொழிலாளி காயம்

1,111 ரூபாயில் விமானத்தில் பயணம் செய்யலாம்: இண்டிகோ சூப்பர் அறிவிப்பு..!

வெயிலும் அதிகரிக்கும், மழையும் பெய்யும்! தமிழக வானிலை நிலவரம்..!

பல சோதனைகளை தாண்டி 75-வது ஆண்டு நோக்கி பயணமாகும் ஒரே இயக்கம் தி.மு.க- அமைச்சர் தங்கம் தென்னரசு....

குடிநீர் பைப் லைனுக்காக வெட்டிய பள்ளத்தில் சிக்கிக்கொண்ட தனியார் பள்ளி வாகனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments