Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.. மிக்ஜாம் புயலால் எச்சரிக்கை..!

Webdunia
சனி, 2 டிசம்பர் 2023 (14:52 IST)
மிக்ஜாம் புயல் கரையை கடப்பதால் சென்னை, திருவள்ளூர் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
மிக்ஜாம் புயல் கரையை கடக்கும் நாளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 5ஆம் தேதி ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.
 
மேலும் டிசம்பர் 4,5ஆம் தேதிகளில் சென்னை மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்  எனவும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 டிசம்பர் நான்காம் தேதி மிக்ஜாம் புயல் கரையை நெருங்கி வரும் என்றும் டிசம்பர் 5ஆம் தேதி  ஆந்திர கடற்கரையோரம் கரையை கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே புயல் கரையை கடக்கும் வரை சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments