Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரையை தொட்ட புயலின் வெளிப்பகுதி! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (16:19 IST)
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் கரையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் அதன் வெளிப்புற பகுதி கரையை தொட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக உருமாறியுள்ளது. தீவிர புயலாக உள்ள நிவர் கரையை கடக்கும் முன்னர் அதி தீவிர புயலாக மாறும் என கூறப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு தொடங்கி விடியும் வரை புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது நிவர் புயல் மணிக்கு 11 கி.மீ என்ற கணக்கில் கரையை நோக்கி நகரந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி நிவர் புயல் கடலூரிலிருந்து 120 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 130 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து 150 கி.மீ தொலைவிலும் நெருங்கி வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் நிவர் புயலின் வெளி சுற்று பகுதி கரையை தொட்டுள்ளதாகவும், இதனால் காரைக்கால் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம்! அரசின் திட்டத்தை தனியாளாக தொடங்கிய பிரபல யூட்யூபர்!

தொகுதி மறுசீரமைப்பு: நம்ம முயற்சிதான் இந்தியாவை காப்பாற்றும்! - வீடியோ வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

Gold Price Today: சற்றே குறைந்த தங்கம் விலை! சவரன் எவ்வளவு?

கோழியா? முட்டையா? எது முதலில் வந்தது? - புதிருக்கு விடை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments