Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்.. புயலுக்கு என்ன பெயர் தெரியுமா?

Mahendran
செவ்வாய், 26 நவம்பர் 2024 (13:59 IST)
வங்கக்கடலில் நாளை புயல் உருவாக இருப்பதை உறுதி செய்துள்ள வானிலை ஆய்வு மையம், அந்த புயலுக்கான பெயரையும் வெளியிட்டுள்ளது. 
 
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று நாளை புயலாக உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தற்போது, 12 கிலோமீட்டர் வேகத்தில் தமிழக கடற்கரையை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில், நவம்பர் 27ஆம் தேதி புயலாக வலுப்பெறும் எனவும், அது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரை நெருங்கி, பின்னர் இரண்டு நாட்களில் தமிழக கடற்கரை நோக்கி வரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரை செய்த ’ஃபெங்கல்’என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த புயல் காரணமாக டெல்டா மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments