Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சைபர் குற்றவாளியாக மாற்ற கோச்சிங் சென்டர்.. கைதானவரின் அதிர்ச்சி தகவல்..!

Siva
செவ்வாய், 5 நவம்பர் 2024 (11:28 IST)
வேலையில்லா பட்டதாரிகளை குறிவைத்து, அவர்களை கோச்சிங் சென்டர்களில் பயிற்சி பெற வைத்து அதன் பின் சைபர் குற்றவாளியாக மாற்றுகின்றனர் என கைதான ஒருவர் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் திருப்பூரை சேர்ந்த ஜவுளி வர்த்தகர் ஒருவரிடம் டிஜிட்டல் மோசடி செய்து ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், "வேலை தேடும் பட்டதாரிகளை சைபர் குற்றவாளிகளாக மாற்ற வலை விரித்தோம். அவர்களுக்கு போதிய திறமை இல்லாததால் கோச்சிங் சென்டர் நடத்தி, சைபர் குற்றங்களை செய்ய வேண்டும் என்று பயிற்சி கொடுத்தோம்," என்றும் கூறியுள்ளார்.

"எங்களைப் போன்ற பலர் கோச்சிங் சென்டர் நடத்தி, அவற்றில் பயிற்சி பெற்றவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்புகள் கொடுக்கின்றனர். இதனால் பட்டதாரிகள் அதிக அளவில் சைபர் குற்றவாளிகளாக மாறுகிறார்கள். அவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வருமானத்துடன் சைபர் குற்றங்களை செய்ய வைத்தோம்," என அந்த நபர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

நீட் போன்ற தேர்வுகளுக்கு மட்டும் அல்லாமல், சைபர் குற்றம் செய்வதற்கும் கோச்சிங் சென்டர்?" என இந்த தகவலை அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளனர்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்து தோல்வி பழனிசாமியை மக்கள் நம்ப மாட்டார்கள்: முதல்வர் ஸ்டாலின்

ரத்தப்பணம் வேண்டாம்.. மன்னிக்க முடியாது.. நிமிஷாவால் கொலை செய்யப்பட்டவரின் சகோதரர் உறுதி..!

கடன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்.. மீண்டும் குறைகிறது ரெப்போ வட்டி விகிதம்..!

புதினிடம் பேசி போரை நிறுத்துங்கள்.. இல்லையெனில் உங்களுக்கு தான் பாதிப்பு: இந்தியாவுக்கு நேட்டோ எச்சரிக்கை..!

நீதிமன்றத்தால் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவித்து மோசடி.. 2 பேடிஎம் ஊழியர்கள் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments