Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்சேதுபதி மகள் குறித்த சர்ச்சை பதிவு! – விசாரணையில் இறங்கிய சைபர் க்ரைம் போலீஸார்!

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2020 (13:20 IST)
விஜய் சேதுபதியின் மகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட நபர் மீது சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை எடுக்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான “800” படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் ஈழ எதிர்ப்பு மனநிலை கொண்ட முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது இந்த படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளார்.

முன்னதாக சிலர் விஜய் சேதுபதியை விலக கோரி வலியுறுத்தி வந்த நிலையில் சமூக வலைதளங்களில் சிலர் விஜய் சேதுபதியின் மகள் குறித்து ஆபாசமாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் அவதூறாக பேசியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கனிமொழி எம்.பி உள்பட பலர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் அவதூறாக பதிவிட்ட நபர் குறித்த தகவல்களை சைபர் க்ரைம் போலீஸார் விசாரித்து வருவதாகவும், விரைவில் அவதூறாக பேசிய நபர் கைது செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

மும்பையில் இந்தியில் பேசி பிரச்சாரம் செய்த சரத்குமார்.. 3 மொழிகளில் பேசிய அண்ணாமலை..!

திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறது: மம்தா பானர்ஜி

வாட்ஸ் அப் மூலம் கரண்ட் பில் கட்டலாம்: மின்சார வாரியம் அறிவிப்பு

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ராமர் கோயிலை புல்டோசரால் இடிப்பார்கள்: பிரதமர் மோடி பிரச்சாரம்

அடுத்த கட்டுரையில்
Show comments