Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத பிரச்சினையை கிளப்பினால் கடுமையான நடவடிக்கை! – அமைச்சர் எச்சரிக்கை

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (11:27 IST)
தமிழகத்தில் மத பிரச்சினையை தூண்டும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் யூட்யூப் சேனல் ஒன்றில் தமிழ் கடவுள் முருகன் மற்றும் கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாக வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த சேனலுக்கு பின்னால் இஸ்லாமிய அமைப்புகள் இருப்பதாகவும் அவர்களை கண்டித்து கார்ட்டூன் சித்தரித்து வெளியிட போவதாகவும் கூறிய ஓவியர் சுரேந்திர குமார் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவங்களால் தொடர்ந்து சமூக வலைதளங்களில் மத ரீதியான விவாதங்கள் எழுந்துள்ளது. மத பற்றாளர்களை புண்படுத்தும்படி செயல்படுவது குறித்து நடிகர்கள் சிலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தொடர்ந்து இந்து மதத்தை இழிவுப்படுத்தி வரும் இயக்கங்களை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்போவதாக தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

இதனால் பரபரப்பான சூழல் எழுந்துள்ள நிலையில் பேசியுள்ள தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் “தமிழகத்தில் மத ரீதியான பிரச்சினைகள் ஏற்படுவதை ஏற்க முடியாது. மதரீதியாக கலவரங்களை தூண்டும்படி செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments