Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த செமஸ்டருக்கும் தேர்வு ஆன்லைனில்தான்! – உயர்கல்வித்துறை தகவல்!

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (14:34 IST)
கொரோனா காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்ட நிலையில் நடப்பு செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் மூலமாக நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக கல்லூரிகள் இயங்காமல் உள்ள நிலையில் அனைத்து பாடங்களும் ஆன்லைன் மூலமாகவே நடந்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் வழங்கப்பட்ட ஊரடங்கு தளர்வில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரி சென்று படிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடைபெறுமா அல்லது ஆன்லைன் மூலம் நடத்தலாமா என்பது குறித்து பல்கலைகழகங்கள் ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் அனைத்து பல்கலைகழகங்களிலும் செம்ஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த உயர்கல்வித்துறை விரைவில் அறிவிக்க உள்ளதாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments