Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக வேட்பாளர் மறைவுக்கு திமுகவினரின் கொலை மிரட்டலே காரணம் - ஓபிஎஸ்- இபிஎஸ்

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (23:21 IST)
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் சமீபத்தில் நிறவடைந்த நிலையில் ஆளுங்கட்சியான திமுக,  எதிர்க்கட்சியன அதிமுக, தேமுதிக, ம. நீ.ம உள்ளிட்ட கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 இந்நிலையில்,  ஆளும்கட்சியான திமுக மீது ஈபிஎஸ் குற்றசாட்டு தெரிவித்துள்ளனர்.
அதில்,     நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் மிரட்டப்படுவதாகவும், அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் மறைவுக்கு திமுகவினரின் கொலை மிரட்டலே காரணம் எனத் தெரிவித்துள்ளனர்.

அராஜகத்தில் ஈடுபடுகின்ற திமுகவினர் மீது தேர்தல் ஆணையமும் காவல்துறையும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், சென்னை, சேலம், திருச்சி, தூத்துக்குடி மாவட்ட அதிமுகவினர் 24 பேர்   நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு எதிராகச் செயல்பட்ட புகாரில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments