Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (18:21 IST)
தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை காலை 11 மணிக்கு தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கில் தளர்வுகள்  குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் கொரோன இரண்டாவது அலை வேகமாகப் பரவிவந்த நிலையில் சில வாரங்களாக தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியது.

பின்னர் 23 மாவட்டங்களுக்கு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு, 11 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதையடுத்து கடந்த வாரம் தமிழகம் முழுவதும் ஒரே ஊரடங்கும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் நாளை சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர், வருவாய் துறை அதிகாரிகள், பொதுத்துறை  அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments