Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூலிப்படை கலாச்சாரமா? இல்லவே இல்லை : அடித்து சொல்கிறார் ஜெயலலிதா

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2016 (12:30 IST)
கூலிப்படையினுடைய நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை இருந்து கொண்டிருக்கிறது என்று எதிர்க் கட்சித் தலைவர் கூறினார். இது உண்மைக்கு மாறான ஒரு குற்றச்சாட்டு என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
 

 
சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, “அண்மைக் காலமாக அடுத்தடுத்து நடக்கக் கூடிய கொலைகள், கொள்ளைகள், கூலிப்படையினருடைய அட்டகாசம் ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்றும், கூலிப்படையினுடைய நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை இருந்து கொண்டிருக்கிறது என்றும் எதிர்க் கட்சித் தலைவர் கூறினார். இது உண்மைக்கு மாறான ஒரு குற்றச்சாட்டு” என்றார்.
 
மேலும் அவர் கூறுகையில், “கொலை சம்பவங்கள் குறித்து நாளேடுகளில் செய்திகள் வெளியாகும் போது, பொதுவாக அவை கூலிப்படையினரால் நடைபெற்றதாக செய்திகள் வெளிவருகின்றன. ஆனால், பெரும்பாலான சம்பவங்களில் கொலையுண்டவர்களின் எதிரிகள், உறவினர்கள், கூட்டாளிகள் அல்லது நண்பர்கள் ஆகியோரே இச்செயலில் ஈடுபடுகின்றனர்
 
முன் விரோதம் காரணமாக, பழிக்குப் பழியாக மாறி மாறி கொலைகள் நடக்கும் போது அச்சம்பவங்களில் இரு தரப்பினருக்கும் வேண்டியவர்களே சம்பந்தப்படுகிறார்கள். ஆனால் அது போன்ற சம்பவங்களிலும் கூலிப்படையினர் ஈடுபட்டதாக செய்திகள் வெளி வருகின்றன.
 
அண்மையில் நடைபெற்ற சில கொலை சம்பவங்களிலும் கூலிப்படையினர் ஈடுபடவில்லை. கூலிப்படையினரை அறவே ஒழிக்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் காவல் துறையினர் எடுத்து வருகின்றனர்” என்று முதலமைச்சர் கூறினார்.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments