Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி.ஆர்.பி.எஃப் வீரர் விஜயராஜ் பலி: ஜெயலலிதா இரங்கல்

சி.ஆர்.பி.எஃப் வீரர் விஜயராஜ் பலி: ஜெயலலிதா இரங்கல்

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (06:14 IST)
சத்தீஸ்கர் மாநிலத்தில், மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலில் பலியான, தமிழகத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் வீரர் விஜயராஜின் குடும்பத்திற்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள மேலவாடா என்ற கிராமத்தில் மாவோயிட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது. அப்போது, சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். இதில், திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரைச் சேர்ந்த விஜயராஜூம் பலியானார்.
 
மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் விஜயராஜ் வீர மரணம் அடைந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன். விஜயராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments