Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்டர், கரெண்ட் சப்ளை கட்: சென்னையில் உள்ள 227 லேடீஸ் ஹாஸ்டல் மீது கிரிமினல் நடவடிக்கை!

Webdunia
புதன், 5 ஜூன் 2019 (13:12 IST)
சென்னையில் இயங்கி வரும் 277 பெண்கள் விடுதி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்ககோரி ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
சென்னைக்கு படிப்பதற்காக அல்லது பணிக்காக வரும் பெண்கள் உறவினர்கள் இருந்தும் தனியார் விடுதிகளில் தங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடுகிறது. 
 
சொந்த ஊரைவிட்டு, பெற்றோர், நண்பர்களை விட்டு வெளியூருக்கு வரும் போது தங்கும் இடம் சவுகரியமாக இருந்தால் மட்டுமே நிம்மதியாக படிக்கவோ அல்லது வேலைக்கு செல்லவோ முடியும். 
ஆனால், சென்னையில் பல விடுதிகள் முறையான லைசன்ஸ் இல்லாமல் செயல்பட்டு வருகிறதாம். அந்த வகையில் சென்னையில் பதிவு செய்யாமல் இயங்கிவரும் 277 பெண்கள் விடுதிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. 
 
அப்படி பதிவு செய்யாமல் இயங்கி வரும் 277 பெண்கள் விடுதி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்ககோரி சென்னை ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
அதோடு, விடுதிகளில் தண்ணீர் மற்றும் மின்சார விநியோகத்தை நிறுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார். ஆனால், அந்த 277 விடுதிகள் எந்தெந்த பகுதியில் உள்ளன என்பது தெரிவிக்கப்படவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஜனாதிபதிக்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமா? முடியாது: உச்சநீதிமன்றம்

சிவன் ஆட்டத்தை பார்த்திருப்பீங்க.. இனி சீமான் ஆட்டத்தை பாப்பீங்க..! தேர்தலில் தனித்து போட்டி! - சீமான் அறிவிப்பு!

அதிருப்தியில் இருக்கிறாரா சரத்குமார்? மீண்டும் தொடங்கப்படுகிறது அ.இ.ச.ம.க?

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிரிவு தரும் மத்திய அரசு.. உண்மையில் பாதுகாப்பா? அல்லது உளவு பார்க்கவா?

2026 தேர்தலில் 10 சீட்டுக்கள் வேண்டும்.. இப்போதே துண்டு போடும் வைகோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments